search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் நடத்தை விதிமீறல்"

    • முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் உள்ள 30,602 வாக்குச்சாவடிகளில் 1.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.
    • 50,000 போலீசார், 65 கம்பெனி துணை ராணுவ படை மற்றும் பிற மாநிலங்களின் மாநில ஆயுதப்படை போலீசார் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 19-ந்தேதி தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

    மேலும் பெங்களூரு ஊரக மற்றும் மைசூர் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளின் நிகழ்வுகள் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் உள்ள 30,602 வாக்குச்சாவடிகளில் 1.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். 50,000 போலீசார், 65 கம்பெனி துணை ராணுவ படை மற்றும் பிற மாநிலங்களின் மாநில ஆயுதப்படை போலீசார் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறினார்.

    முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் ரூரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பல்லாபூர் மற்றும் கோலார் ஆகிய 14 தொகுதிகளில் 2,88,19,342 வாக்காளர்கள் உள்ளனர். 1,44,28,099 பேர் ஆண்கள், 1,43,88,176 பேர் பெண்கள் மற்றும் 3,067 மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

    • கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தேர்தல் பிரிவினரே நேரடியாக விசாரிக்கின்றனர்.
    • ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதால் வாக்காளருக்கு பணம் கொடுத்தல் பணம் கொண்டு செல்லுதல் போன்ற புகார்கள் வருவது நின்றுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. டோல் பிரி எண் மூலமும், சி-விஜில் ஆப் மூலமும் இதுவரை புகார்களை அனுப்பி வருகின்றனர்.

    கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்ததால் அன்று இரவு வரை தேர்தலுக்கான பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் செயல்பட்டனர். பொதுமக்கள் வாக்காளர்களிடம் இருந்து வரப்பெற்ற புகார்களை அக்குழுவினருக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தேர்தலில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், ஈரோடு மாவட்டத்தை ஒட்டிய கர்நாடக மாநில எல்லையான பர்கூர் மற்றும் பண்னாரி, திம்பம் சோதனை சாவடியை ஒட்டிய பகுதியில் மட்டும் தலா 3 பறக்கும் படையினர் செயல்பட்டு வருகின்றனர். மற்ற அனைத்து குழுக்களும் 20-ந் தேதி கலைக்கப்பட்டு அவரவர் பணிக்கு திரும்பினர்.

    இதனால் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தேர்தல் பிரிவினரே நேரடியாக விசாரிக்கின்றனர். ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதால் வாக்காளருக்கு பணம் கொடுத்தல் பணம் கொண்டு செல்லுதல் போன்ற புகார்கள் வருவது நின்றுள்ளது.

    ஆனாலும் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று வரை சி-விஜில் ஆப் மூலம் 78 புகார், கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு 170 புகார் என மொத்தம் இதுவரை 248 புகார்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளன.
    • பணம் விநியோகம், மது வழங்குதல், பரிசு அளித்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற்றது.

    2-வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி கேரள மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ளது. கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள், கேரளாவில் ஒன்றையொன்று எதிர்த்து களத்தில் உள்ளன. பாரதிய ஜனதா கட்சியும் வெற்றியை எதிர்பார்த்து போட்டியில் உள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சி-விஜில் மூலம் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நேற்று வரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 661 புகார்கள் வந்துள்ளன. இதில் அங்கீகரிக்கப்படாத சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் தொடர்பாக 1 லட்சத்து 83 ஆயிரத்து 842 புகார்களும், சொத்துக் குவிப்பு தொடர்பாக 10 ஆயிரத்து 999 புகார்களும் வந்துள்ளன.

    மேலும் பணம் விநியோகம், மது வழங்குதல், பரிசு அளித்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்து, 2 லட்சத்து 6 ஆயிரத்து 152 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் தெரிவித்துள்ளார். 3 ஆயிரத்து 83 புகார்கள் ஆதாரமற்றவை என நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    • கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு இதுவரை 63 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 44 புகார் என மொத்தம் 107 புகார்கள் வந்துள்ளன.
    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 107 புகார்கள் வந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு இதுவரை 63 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 44 புகார் என மொத்தம் 107 புகார்கள் வந்துள்ளன.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் 106 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.
    • தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும். ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாகன சோதனை தொடரும். எனவே உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4-ந்தேதி வரை தொடரும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.208 கோடி பணம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டவை ஆகும்.

    இவற்றில் தமிழகம் முழுவதும் ரொக்கப் பணம் மட்டும் ரூ.88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

    அதன் பிறகு இதில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இந்த பணம் யாருடையது யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிற விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்திற்கு ஆதரவாக 5000 நோட்டீஸ்கள் இருந்தது தெரியவந்தது.
    • பறக்கும் படை அதிகாரி சுனில் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி காந்திநகர் பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இன்றி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாளக்குறிச்சி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்திற்கு ஆதரவாக 5000 நோட்டீஸ்கள் இருந்தது தெரியவந்தது. அந்த நோட்டீசுகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பறக்கும் படை அதிகாரி சுனில் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளருமான சாந்தினி பகவதியப்பன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×